வங்கதேசத்தில் ஹிந்து இனப்படுகொலைக்கு எதிராக ஏபிவிபி

0
33

புதுடெல்லி: வங்கதேசத்தில் ஹிந்து இனப்படுகொலைக்கு எதிராக ஏபிவிபியினர் போராட்டம் நடத்தினர். . வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக இஸ்லாமிய பயங்கரவாதிகள் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று ஏபிவிபி டெல்லி மாநில செயலாளர் ஹர்ஷ் அத்ரி கூறினார். மனித விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வங்கதேசத்தை இந்தியா கேட்டுக் கொண்டது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார். வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here