ஆங்கிலேயரின் கல்வி திட்டம் வேலைக்காரரை உருவாக்கியது : பிரதமர் மோடி

0
170

புதிய தேசிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்த, உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் மூன்று நாள் மாநாடு நேற்று துவங்கியது. இதில் பிரதமர் மோடி பேசியது: ஆங்கிலேயர்கள், தங்களுக்கு வேலை செய்வதற்கான ஆட்களை தயார்படுத்தும் விதத்தில், இந்தியாவில் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். கல்வித் திட்டம் என்பது வெறும் பட்டமளிப்புடன் முடிந்து விடும் விஷயமாக இருக்கக்கூடாது.

நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான மனித ஆற்றலை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.

ஆங்கிலேயர்கள் ‘வேலைக்காரர் பிரிவு’ என்பதை உருவாக்க அமல்படுத்திய கல்வி திட்டத்தில் சுதந்திரத்திற்குப் பின் சில மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் பல அம்சங்கள் அப்படியே நீடிக்கின்றன. அவற்றை சீர்திருத்துவதுதான் புதிய தேசிய கல்வித் திட்டத்தின் நோக்கம்.

வரும் ஆண்டுகளில் சர்வதேச கல்வி மையமாக இந்தியா உருவெடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த மாநாட்டில் புதிய சிந்தனைகள், புதிய உத்திகள் குறித்து விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here