சிவன் சிகரெட் புகைப்பது போன்ற பேனர் : ஹிந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு

0
259

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தில் சிவன் சிகரெட் புகைப்பது போன்ற சர்ச்சை படத்துடன் திருமண வாழ்த்து பேனர் வைத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திங்கள்சந்தை அருகே ஆரோக்கியபுரத்தை சேர்ந்த பிரதீஷ் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து அவரது நண்பர்கள் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர்.
சிவன் சிகரெட் புகைப்பது போன்ற படம் இருந்தது. இதற்கு ஹிந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இரணியல் போலீசார் அதனை அப்புறப்படுத்தினர்.இது தொடர்பாக மாப்பிள்ளையின் தம்பி மணிகண்டன் 22, அவரது நண்பர்கள் சேகர் 23 , ரஞ்சித் 22 , சுபின் 23 ,ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here