”சர்ச்” கட்டுமானத்திற்கு தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு

0
300

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் புதுார் அக்ரஹாரம் சிவகுமார் தாக்கல் செய்த மனு : அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட சர்வே எண்ணில், சர்ச் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறவில்லை. தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வழிபாடு நடத்துவதால், மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. சர்ச் கட்டினால், மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும். சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

சர்ச் கட்டுமானத்திற்கு கலெக்டர் தடையில்லா சான்று வழங்கியுள்ளார். இதில், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளவில்லை. கலெக்டர் வழங்கிய தடையில்லா சான்றிற்கு தடை விதிக்க வேண்டும். சர்ச் கட்டுமானத்திற்கு கட்டட அனுமதி வழங்கக் கூடாது என, அரிமளம் பேரூராட்சிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், ”கலெக்டரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. புதுக்கோட்டை கலெக்டர், ஆர்.டி.ஓ., அரிமளம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்படுகிறது,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here