இஸ்ரேல் பாலஸ்தீனப் போர் தொடங்கியது என இஸ்ரேலியப் பிரதமர் நேதன்யாகு அறிவிப்பு

0
111

‘ ஆபரேஷன் ஐயன் ஸ்வோர்ட்ஸ் ‘ ‘Operation Iron Swords ‘ என்று இப்போருக்கு பெயரிடப்பட்டுள்ளது. காஸா ஸ்ட்ரிப் பகுதியில் உள்ள பாலஸ்தீன பயங்கரவாதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. 2 மணி நேரத்திற்குள் 5000 ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹமாஸ் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் பாதுகாப்புப் படை வீரர்கள், காவல் துறையினர், பொதுமக்களைப் பினையாக பிடித்து வைத்துள்ளனர். பாலஸ்தீனியர்கள் தாக்குதலில் இதுவரை 22 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் தாக்குதலில் காயமடைந்த 500 க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இஸ்ரேலியப் படைகள் (IDF) தீவிரமாக எதிர்தாக்குதலில் இறங்கியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here