நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு மகாத்மா காந்தியின் கனவு நிறைவேறி வருகிறது

0
65

புதிய குற்றவியல் தீர்ப்புகள் தொடர்பான கருத்தரங்கம் மிகவும் அவசியமானது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் உள்ள வேலூர் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற குற்றவியல் நீதி அமைப்பு நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கு பாதை என்ற மாநாட்டில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “தலைச்சிறந்த நீதிநெறி நூல் திருக்குறள்” எனவும், நீதி பற்றி இராமாயணத்திலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது என்றார்.

மேலும், “சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு மகாத்மா காந்தியின் கனவு தற்போது நிறைவேறி கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு இந்தியா வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here