அனுமதியின்றி நடந்த ஜெபக்கூட்டம்; தடுத்து நிறுத்திய இந்து முன்னணி.

0
291

குரோனா காலகட்டத்தில் தொற்று பரவும் வகையில் தாராபுரத்தில் ஜெபக்கூட்டம் நடத்தியது தெரிய வர தடுத்து நிறுத்தியது ஹிந்து முன்னணி.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் மணக்கடவு பஞ்சாயத்து ஜெ.ஜெ. நகர் பகுதியில் அனுமதியின்றி கொட்டகை அமைத்து தூத்துக்குடி திருநெல்வேலி பகுதியில் இருந்து வந்த 150 மேற்பட்ட நபர்கள் கூட்டி ஜெபகூட்டம் நடத்தினர்.


தகவல் அறிந்த இந்து முன்னணியினர் அங்கு திரண்டு குரோனா தொற்று அதிகம் பரவும் காலத்தில் அனுமதி இன்றி செயல்படும் தற்காலிக ஜெபகூட்டத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் தாராபுரம் சார் ஆட்சியரிடம் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். பின்னர் அனுமதியி்ன்றி செயல்பட்ட ஜெபகூடம் அகற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here