திசையா? நேரமா?

0
138

ஒரு நாள், ஒரு விமானியுடன், ஒற்றைப் பயணியாக, விமானத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். திடிரென்று விமானத்தின் இஞ்சின் பழுதடைந்து விடவே, விமானம் ஆகாயத்தில் தடுமாறுகிறது. எந்த நேரத்திலும் விமானம் விபத்துக்குள்ளாகும் நிலைமை வருகிறது.

அப்போது விமானி உங்களிடம், பாராஷூட் ஒன்றைக்கொடுத்து, தப்பி விடுமாறு உதவுகிறார். நீங்களும் பாராஷூட்டை எடுத்துக்கொண்டு வானிலிருந்து குதித்து விடுகின்றீர்கள். ஆனால் சோதனையாக, அந்த பாராஷூட்டோ உங்களை ஒரு அடர்த்தியான காட்டிற்குள் எடுத்துச் சென்று இறக்கிவிடுகிறது.

காட்டின் எல்லாப்புறமும் ஒரே மாதிரி இருக்கின்றது. காட்டின் எந்தப்புறம் ஓடினால் தப்பிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியவில்லை. சில நொடிகள் சுற்றி, முற்றி பார்க்கின்றீர்கள். அப்போது ஒரு பலகையில் காட்டின் இரு விதிகள் எழுதப் பட்டிருக்கிறது..

முதல்விதி. மனிதர்கள் எவரேனும் தவறுதலாக காட்டிற்குள் நுழைந்து விட்டால் சரியாக ஒரு மணி நேரத்தில் காட்டின் மிகக் கொடிய விலங்குகள் மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு மோப்பம் பிடித்து வந்து சேரும். எனவே ஒரு மணி நேரத்திற்குள் அந்த காட்டை விட்டு நீங்கள் தப்பித்தாக வேண்டும்.

இரண்டாவது விதி.. கிழக்குப் பக்கமாக சென்றால் மட்டும்தான் அந்தக் காட்டை விட்டு நீங்கள் வெளியே செல்ல முடியும்.

மீண்டும் ஒருமுறை நீங்கள் சுற்றிலும் பார்க்கின்றீர்கள். கிழக்கு திசை எங்கு இருக்கிறது? என்று தெரியவில்லை. என்ன செய்வதென்று? ஒரு நொடி வழி தெரியாமல் திகைத்துப் போகிறீர்கள். காட்டு விலங்குகளின் பசிக்கு இரையாகி விடுவோமோ? என்ற அச்சம் வேறு உங்களை ஆட்டிப் படைக்கிறது.

அப்போது அந்த இடத்தில் திடீரென ஒரு தேவதூதன் உங்கள் முன் தோன்றுகிறான். உங்களின் சூழ்நிலையை புாிந்துக்கொண்டு, உங்களிடம் இரு பொருட்களை நீட்டுகிறான். ஒன்று மணி பார்க்கும் கடிகாரம். அதன் மூலம் உங்களுக்கு இன்னும் எவ்வளவு நேரம் தப்பிக்க இருக்கிறது? என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆனால் அதை வைத்துக் கொண்டு திசையை கண்டுபிடிக்க இயலாது.

மற்றொன்று திசைக் காட்டும் கருவி. இந்தக் கருவி மூலம் உங்களுக்குத் தப்பிச் செல்லக்கூடிய திசை தெரியும். ஆனால் நீங்கள் தப்பிக்க எவ்வளவு நேரம் மீதம் உள்ளது? என்று தெரியாது.

தேவதூதன் உங்களிடம் இரு பொருட்களையும் காண்பித்து, நான் உனக்கு உதவ முடியும். ஆனால் இந்த இரு பொருள்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் தான் நீ எடுத்துக் கொள்ள முடியும். உனக்கு எது வேண்டும்..?” என்று கேட்கிறான்!!

இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் எந்தப் பொருளை தைரியமாகத் தேர்வு செய்வீர்கள்? எது உங்களுக்கு மிக முக்கியமானதாகத் தோன்றும்?

திசையா நேரமா? வேகமா வழியா? ஆம், உங்கள் யூகமும் பதிலும் சரிதான். திசை காட்டும் கருவிதான் உங்களுக்கு அதிக தேவையாக இருக்கும்.

என் அன்புக்குாியவா்களே,

இந்தக் கதைக்கு மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கைக்கும் இதே நிலை தான்.
பல பிரச்சனைகள் நமக்கு வரும்போது சரியான திசையில் செல்லக்கூடிய முடிவே பெரிய வெற்றியை பெற்றுத் தருகிறது. ஒருவர் எவ்வளவு தான் திறமைகள் கொண்டவராய் இருப்பினும், வேகமாக செயல்படக்கூடியவராய் இருப்பினும், சரியான வழியில் செல்லத் தொியவில்லை என்றால், அவர் இலக்கை அடைவது இயலாத காாியமே.

வெற்றிக்கு வேகமாக ஓடுவதை காட்டிலும், சாியான திசையில் ஓடுவது முக்கியமான காரணமாக இருக்கிறது. எனவே இனிமேலாவது உங்கள் திசையை, வழியை, இலக்கை சரியாகத் தீர்மானியுங்கள். பயணம் வெற்றி பெறட்டும்.

PN. சங்கரராமன்
pnsankararaman@gmail.com.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here