ஸ்ரீ நாரதர் விருது கோவை

0
235

விஸ்வ ஸம்வாத் கேந்திரம், தென்தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றன.

உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில பாரத அளவில் சிறந்த பத்திரிக்கையளர்கள் மற்றும் எழுத்தாளர்களை கௌரவித்து விருது வழங்குவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக கோவையில் நடைபெற்ற ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழாவில், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் முன்னாள் முதன்மை எழுத்தாளரான திருமதி ராதா வெங்கடேசன் அவர்களுக்கும்,ஹிந்து தமிழ் திசை நாளிதழின் பொது மேலாளர் ஸ்ரீ ராஜ்குமார் அவர்களுக்கும், சமுதாய சிந்தனை கொண்ட எழுத்தாளர் ஸ்ரீ ஜோதி கணேசன் ஆகியோர்களுக்கும் ஸ்ரீ நாரதர் விருது – 2021 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் . கோயமுத்தூர் தினமலர் நாளிதழின் முதன்மை ஆசிரியர் ஸ்ரீ K.விஜயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். ஆர்எஸ்எஸ் தென்பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் ஸ்ரீ ஸ்ரீராம் ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை பின்தொடர்ந்து நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம் ஒலி வடிவ புத்தகம் வெளியீடப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில்
கோவை மாநகர ஆர்எஸ்எஸ் தலைவர் ஸ்ரீ ராஜா ஜி,
தென்தமிழக ஊடகத்துறை பொருப்பாளர் ஸ்ரீ மோகன் ஜி, தென்தமிழக ஊடகத்துறை இணை பொருப்பாளர் ஸ்ரீ சூரியநாரயணன் ஜி மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here