2021 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வேலை வாய்ப்பு அதிகரிப்பு-மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

0
189

2021 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது துறைகளால் உருவாக்கப்பட்ட மொத்த வேலைவாய்ப்பு 3.10 கோடியாக இருந்தது, இது ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தை விட 2 லட்சம் அதிகம் என்று திங்களன்று வெளியிடப்பட்ட தொழிலாளர் அமைச்சகத்தின் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்ட காலாண்டு வேலைவாய்ப்பு கணக்கெடுப்பு (QES) அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2021 இல் COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டைத் தாக்கிய போது , கொடிய வைரஸ் பரவுவதைத் தடுக்க மாநிலங்கள் ஊரடங்கு முதலான கடும் கட்டுப்பாடுகள் வ்திக்கப்பட்டன. அவற்றை நீக்கிய பின்னர் பொருளாதார நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது இதன் மூலம் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here