லாவண்யா வழக்கு:முதல் தகவல் அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது

0
224

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார்.

மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுரை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் இதை உறுதி செய்தது. இந்நிலையில் சி.பி.ஐ நேற்று இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது. பல கோணங்களிலும் இந்த வழக்கை விசாரிக்க இருப்பதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here