இஸ்லாமிய சோமாலிய நாட்டில் தற்கொலைப்படை தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு

0
387

சோமாலியாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். 17-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சோமாலியாவின் ஹிரான் மாகாணத்தில் உள்ளது பெலட்வெய்னே நகரம். இங்குள்ள ஹாசன்திஃப் என்ற பிரபலமான திறந்தவெளி உணவகத்தில் இன்று மதியம் வழக்கம் போல அதிக அளவிலான மக்கள் உணவருந்த வந்திருந்தனர். இந்நிலையில், 2.30 மணியளவில் அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் அங்கிருந்த 5 அரசு ஊழியர்கள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

குண்டுவெடிப்பு தாக்குதலில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here