சீனாவில் புது வைரஸ் முழு ஊரடங்கு அறிவிப்பு

0
446

சீனாவின் சாங்சன் பகுதியில் புதிய வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவின் உகான் நகரில் 2019- ல் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உயிர்பலி எண்ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது. இந்தநிலையில் சீனாவில் அடுத்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தி உள்ளது. இங்கு வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த சாங்சன் பகுதியில் 90 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு புதிய வைரஸ் மக்களுக்கு பரவி வருகிறது. இதையடுத்து நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here