காஷ்மீரில் ஆர்.எஸ்.எஸ் சேவை

0
189
டெல்லியில் நடந்த ரத்தன் சாரதா, யஷ்வந்த் பதக் ஆகியோர் எழுதிய ‘மோதலுக்கான தீர்வு: ஆர்.எஸ்.எஸ் வழி’ (Conflict Resolution: The RSS Way) என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய துணை செயலாளர் அருண்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1990 முதல் 94வரை நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அப்போது, ​​ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தினர் அதனைவிட்டு வெளியேறவில்லை. அங்கேயே தங்கி, கல நிலவரத்தின் உண்மையைப் பற்றி தெரியப்படுத்த பல முனைகளில் ஒரே நேரத்தில் வேலை செய்தனர். பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உதவி செய்தது. காஷ்மீரில் கள நிலவரத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக நாடு தழுவிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது ஆர்.எஸ்.எஸ். அதேசமயம், அங்கு ராணுவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது.
 
1980கள் மற்றும் 1990களில் பஞ்சாபில் பயங்கரவாதம் பெரிதாக இருந்தபோதும், ​​ஆர்.எஸ்.எஸ் பஞ்சாபை விட்டு வெளியேறவில்லை. அப்பகுதியில் தங்கி சேவை மற்றும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் பஞ்சாபில் உள்ள சூழ்நிலையை வெளிப்புற சக்திகள் தங்கள் சொந்த நலன்களும் பயன்படுத்திக் கொள்ள எப்போதும் முயல்கின்றன. இத்தகைய சக்திகளின் உள்நோக்கம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் பெருமளவில் உழைத்தது.
 
‘ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே கலாச்சாரம்’ என்பது நமது முழக்கம் அல்ல, அது நமது நம்பிக்கை. நம் அனைவரின் முன்னோர்களும் ஒன்றே; நமது பாரம்பரியம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பகிரப்பட்ட ஒரு பொதுவான பாரம்பரியமாகும். சமூகத்தில் சிலர் ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்த்தாலும், அது யாரையும் எதிரியாக கருதுவதில்லை. சமூகத்தில் இரண்டு வகையான மனிதர்கள் இருப்பதாக ஆர்எஸ்எஸ் நம்புகிறது. ஒருவர் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைந்தவர்; மற்றொருவர் இன்னும் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணையாமல் இருப்பவர். ‘மோதல்’ என்ற கருத்து ஆர்.எஸ்.எஸ் அகராதியில் கிடையாது. ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் களத்தில் எதிர்ப்பை சந்தித்ததில்லை. ஆனால் கல்வி மற்றும் ஊடக உலகில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் பற்றி எதிர்மறையான கருத்துகளையும் வதந்திகளையும் பரப்பும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. அதில் சில பகுதிகள் தற்போது படிப்படியாக மாறி வருகின்றன” என்றார்.
 
புத்தகத்தை எழுதிய ஆசிரியர்களை வாழ்த்தி பேசிய ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ், “இந்த புத்தகம், ஆர்.எஸ்.எஸ் பற்றிய முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தை நாட்டிற்கும் உலக அரங்கிற்கும் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சி இது. இது ஒரு வகை விழிப்புணர்வாகவும் இருக்கும். சங்கத்தைப் பற்றிய சமூகத்தின் கருத்து பத்திரிக்கையாளர் சமூகத்தால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள், செயல்பாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான திட்டங்கள், 30 ஆயிரம் வித்யாபாரதி பள்ளிகள் உள்ளிட்டவை கொண்ட ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் வலிமை, பாரதத்தின் பாதிக்கும் மேற்பட்ட சமூகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
 
பல்வேறு பிரச்சனைகள் பற்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அதன் தலைவரின் உரைகள், பொது செயலாளரின் அறிக்கைகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தீர்மானங்கள் ஆகிய மூன்று வழிகளில் மட்டுமே தெரிவிக்கப்படுகிறது. ரத்தன் ஷாரதாவின் ஆய்வுக் கட்டுரையாக அமைந்துள்ள இந்தப் புத்தகம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீர்மானங்கள் குறித்த ஆழமான பகுப்பாய்வின் அடிப்படையிலானது.
 
ஆர்.எஸ்.எஸ் பற்றி புரிந்து கொள்ளாமலேயே,, இத்தாலிய பாசிசம், ஹிந்து தலிபான், ஹிந்து மேலாதிக்கவாதம் போன்ற கடுமையான வார்த்தைகளை அவ்வப்போது சிலர் பயன்படுத்துகின்றனர். இந்த புத்தகம் கல்வி வட்டத்தில் உள்ள அந்த வெற்றிடத்தை நிரப்பும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here