அமித்ஷாவுடன், மேற்குவங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் சந்திப்பு

0
331

மேற்குவங்க மாநிலத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள பர்ஷல் கிராம பஞ்., துணைத் தலைவராக இருந்த திரிணமுல் காங்., கட்சியின் பாதுஷேக், 23ம் தேதிவெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து, போக்டுய் கிராமத்துக்கு, கும்பல் அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்தது. இதில், பெண்கள்,குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.மேற்குவங்கத்தை அலற வைத்த இந்த கொடூர சம்வம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.இந்நிலையில் மேற்குவங்க கவர்னர் ஜக்தீப் தன்கர், டில்லிசென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.அப்போது மாநில சட்டம், ஒழுங்கு நிலவம், பிர்பும் கலவரம் தொடர்பாக தற்போதைய நிலை குறித்து கவர்னர் விளக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here