சென்னையில் உள்ள ஐ.சி.எப். எனும் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது.
ரயில்களில் நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் ‘லிங் ஹாப்மென் புஸ்’ என்கிற எல்.எச்.பி. பெட்டிகள் அதிகம் சேர்க்கப்பட்டு வருவதால் இப்பெட்டிகள் அதிகம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. நிர்ணயித்திருந்த இலக்கைவிட 1 பெட்டி கூடுதலாக 3101 பெட்டிகள் தயாரித்து ஐ.சி.எப். சாதனை படைக்கப்பட்டுள்ளது.