காஷ்மீர் ஹிந்துக்கள் (நவரேஹ்) புத்தாண்டுப் பிறகு நவராத்திரி பண்டிகைக் கொண்டாடுவது வழக்கத்தில் இருந்தது. 1990இல் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்து அவர்களை அடித்துத் துரத்திய பிறகு இந்த விழா நடை பெறவில்லை. 32 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீர் பண்டிட்கள் சாரிகா தேவி ஆலயத்தில் (நவரேஹ்) புத்தாண்டை ஒட்டி வருகிற நவராத்திரி விழாவைக் கொண்டாட ஒன்று திரண்டுள்ளனர். அரசியல் சட்டப் பிரிவு 370, 35A அகற்றப்பட்ட பிறகு அங்கு நிகழ்ந்து வரும் மாற்றங்களில் இதுவும் ஒன்று.