நமக்கு வரும் கஷ்டமே நமக்கு அளிக்கப்பட்ட உதவி..

0
101

அவன் மிகவும் இளகிய மனம் படைத்தவன்!!

யாருக்கும் உதவும் உள்ளம் கொண்டவன்!!

அன்று வீட்டின் முற்றத்தில் தன்னை மறந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். வீட்டு முன் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளை எதேச்சையாக பார்த்த போது, ஒரு குட்டி வண்ணத்துப்பூச்சி அவன் கண்ணில் பட்டது. மகரயாழையொத்த அந்த வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து வெளி வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
இந்த சின்ன வண்ணத்துப் பூச்சிக்கு பறந்து வர எவ்வளவு ஆசை இருக்கும்? என்று நினைத்த மாத்திரத்தில், அதற்கு உதவ நினைத்தான்.

உடனே ஓடிச்சென்று ஒரு கத்தரிக்கோலை எடுத்து வந்தான். வண்ணத்துபூச்சியை சுற்றியுள்ள கூட்டை ஆங்காங்கே வெட்டி விட்டான். அவன் மனதில் ஒரு பரமானந்தம்.!!

வண்ணத்துப்பூச்சிக்கு விடுதலை அளித்ததற்காக.!!

நேரம் கடந்தது.. ஆனால் மகரயாழ் வண்ணத்துப்பூச்சி வெளியே வந்த பாடில்லை… சிறிது நேரத்தில் எறும்புகள் அதை மொய்த்தன…. வண்ணத்துப்பூச்சி இறந்துபோய் விட்டிருந்தது… அவன் திகைத்து நின்றான்!!!

கூட்டுப்புழு கூட்டை உடைத்து வெளி வரும்போது வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளுக்கு பறப்பதற்கு தேவையான சக்தியை கொடுக்கும் சில சுரப்பிகளும் சுரக்கும்…
அதற்கு உதவும் நோக்கத்தில் வெட்டி விடப்பட்ட கூடு அதற்கு எமனாகிவிட்டது.!!

நமக்கு வரும் கஷ்டங்கள் நம்மை வாழ்விப்பதற்காக கொடுக்கப்படும் பயிற்சி……

அதனால்….. அதை ஏற்றுக்கொண்டு பயிலுவோம்.

எனக்கு உதவ யாரும் இல்லை என்று நினைக்காதே.!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here