மதுரை குண்டு வெடிப்பில் ஈடுப்பட்டவர்கள் மசூதியில் பதுங்கியுள்ளனர் – இஸ்லாமிய பெண்கள் பரபரப்பு புகார்

0
247

 

2011- ல் மதுரையில் திரு. அத்வானி அவர்கள் வருகை புரிந்த சமயத்தில் குண்டு வெடிப்பில் ஈடுப்பட்டவர்கள் கன்னியாகுமரியில் ஒரு மசூதியில் இருகிறார்கள் என்று சில இஸ்லாமிய பெண்கள் காவல்துறையில் புகார் மனு அளித்தனர். கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகில் ஒரு மசூதி இருக்கிறது. இந்த மசூதியை நிர்வகிப்பது தொடர்பாக இரு இஸ்லாமியர்கள் இடையே நீண்டகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த பிரச்னை சமீபகாலமாக உச்சத்தில் இருந்து வருகிறது. இந்ந நிலையில் தான் சில இஸ்லாமிய பெண்கள் காவல்துறையில் ஒரு திடுக்கிடும் புகாரை அளித்தனர். இஸ்லாமிய பெண்களே காவல்துறையில் புகார் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இது போல் சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி

அலுவலகத்தில் குண்டு வைத்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஏதாவது ஒரு மசூதியில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கும் வகையில் இருக்கிறது. இதுபோன்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் என்று பல முறை இந்து முன்னணி அமைப்பு கூறிவருகிறது. ஆகையால் இதுபோல் தமிழகத்தில் உள்ள மசூதிகளில் பல பயங்கரவாத சம்பத்தில் ஈடுப்பட்டவர்க்ள இருப்பதாக சந்தேகிக்கும் வகையில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here