ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம்

0
2752

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஏழுமலையான் கோயில் கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் அம்மாநில அரசுகள், பொதுமக்கள் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் புதிதாக ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு தற்போது மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மாலையில் சீனிவாச கல்யாண உற்சவமும், மாடவீதி வலமும் நடந்தன. இதில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர மாநில கவர்னர் விஸ்வபூஷன் ஹரிசந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here