விருதுநகர் மாவட்டம் தேசிய விருதுக்கு தேர்வு

0
259

தேசிய எம்.எஸ்.எம்.இ., விருதுகள் 2022 க்கான பிரிவில், விருதுநகர் மாவட்டம் முதல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ‘நிடி ஆயோக்’ அமைப்பு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாவட்டங்களை ஆய்வு செய்து, அதிலிருந்து 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.அவற்றை முன்னேற்றும் வகையில் 2018ல் முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதில் விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.
அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றதற்காக, தேசிய விருதுக்கு விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here