காஷ்மீருக்குள் ஊடுருவ எல்லையில் காத்திருக்கும் பயங்கரவாதிகள்!

0
354

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதி வழியாக ஊடுருவ நூற்றக்கணக்கான பயங்கரவாதிகள் காத்திருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர். அவர்களின் முயற்சியை முறியடிக்க ராணுவத்தினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியை முடுக்கி விட்டுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ்இ முகம்மது, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி பெரும்பாலும் தோல்வியடைந்த நிலையில் ஒரு சிலர் உள்ளே நுழைந்துள்ளனர். கடந்த ஜன.,1 முதல் ஜூன் 28 வரை 121 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here