ஆதித்யா விண்கலம் செப்.2ல் செலுத்தப்படும்- இஸ்ரோ

0
74

சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து செப்டம்பர் 2ம் தேதி காலை 11.50 மணிக்கு செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆதித்யா விண்கலத்தின் முதல்கட்ட சோதனைகள் கடந்த 2020-ம் ஆண்டே நடத்தி முடிக்கப்பட்டது. இந்த விண்கலம், பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது. இந்த விண்கலம் 1,475 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here