பஞ்சாப்பில் எல்லை வழியே பயங்கர ஆயுதங்கள், போதை பொருட்கள் கடத்தல் : இஸ்லாமிய  பயங்கரவாதி கைது

0
198

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் எல்லையை ஒட்டிய பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான 2 பேர் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களை தார்ன்தரன் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து உள்ளனர். 

பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அவர்கள் எல்லை வழியே இந்தியாவுக்குள் ஊடுருவி, பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்த முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

அவர்கள் இருவரும் குர்வீந்தர் சிங் மற்றும் சந்தீப் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 35 கிராம் ஹெராயின் என்ற போதை பொருள், தோட்டாக்கள் நிரம்பிய 2 கைத்துப்பாக்கிகள், 2 தோட்டா உறைகள், 100 கிராம் ஓபியம் வகை போதை பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 

சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில், இதுதவிர வேறு ஏதேனும் திட்டத்துடன் அவர்கள் ஊடுருவியுள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது என பஞ்சாப் டி.ஜி.பி. தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here