விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் ரக்ஷா பந்தன் விழா

0
196

(11-08-2022) வியாழக்கிழமை விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் பிற்பகல் 2-30மணிக்கு ரக்ஷா பந்தன் விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் ஸ்ரீ.அகிலா அவர்கள் ரக்ஷா பந்தன் பற்றிய அரிய கருத்துக்களை எடுத்துரைத்தார்கள். கல்லூரி தாளாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் சகோதரத்தின் முக்கியத்துவம் பற்றி அழகாக எடுத்துரைத்தார்கள். ஆர் எஸ் எஸ் அமைப்பின் மாநில இணைச்செயலாளர்
(மக்கள் தொடர்பு) அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். ஆர் எஸ் எஸ் விழுப்புரம் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜ்நந்தகுமார், நகர செயலாளர் முரளிதரன் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சகோதரத்துவ ராக்கி(ரக்ஷா) அணிவிக்கப்பட்டது. தமிழ்தாய் வாழ்த்துடன் துவங்கி
தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here