சீர்காழியில் பைரவர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

0
336
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.காசிக்கு இணையான பைரவர் ஷேத்திரமாக, இந்த கோவில் விளங்கி வருகிறது. தடையின்றி நாள் தோறும் இந்த சொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டால் வியாபாரம் பெருகி செல்வம் செழிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் காலையில் இந்த பைரவரை வணங்கி சென்று வியாபாரத்தை தொடங்குவது வழக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here