பிரதமரின் பாதுகாப்புப் படையில் பாரத வேட்டை நாய்கள்

0
313
மனதின் குரல் நிகழ்ச்சியில் 2 வருடத்திற்கு முன்பு பிரதமர் பேசும் போது நமது நாட்டு நாய்களைப் பற்றிக் குறிப்பிட்டார்.பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையில் (SPG) முதொல் எனும் நாட்டு நாய்கள் இணைய உள்ளன.நாட்டு நாய்கள் மூர்க்கத்தன்மை, மோப்பம் பிடிக்கும் திறன், சுறுசுறுப்பு, வேட்டை யாடும் வேகம், தெளிவான பார்வை போன்றவற்றில் சிறந்து விளங்குகிறது.
மன்னர்கள் வேட்டைக்குச் செல்லும் போது நாட்டு நாய்களை உடன் அழைத்துச் சென்றுள்ளனர். வனவாசி மலைவாழ் மக்கள் வேட்டை நாய்களை வைத்திருந் தனர். ராஜாசாஹேப் மாலோ ராவ் கோர்படே தான் கர்நாடக வனவாசி மலைவாழ் மக்கள் வேட்டைக்குச் செல்லும் போது முதோல் வேட்டை நாய்களை பயன்படுத்துவதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு முதோல் நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் பாதுகாப்புப் பணியில் இணைய உள்ளன.
ஆத்ம நிர்பர் இயக்கத்தில் இதுவும் ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here