மண்ணச்சநல்லூரில் 6000 பனை விதைகள் விதைக்கப்பட்டது….

0
211

பனை அதற்க்கு இணை எதுவும் இல்லை இந்த பூவுலகில்.எந்த கலப்படமும் இல்லாத இயற்கை உணவு நுங்கு.பனை பொருட்களின் பயன்கள் எண்னிலடங்காதவை அனைவரும் அறிந்ததே. இதை கருத்தில் கொண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் RSS  சார்பாக மண்ணச்சநல்லூர் சுற்றியுள்ள  பகுதியில்  10000 பனை விதை, விதைப்பதை இந்த வருட இலக்காக கொண்டு இது வரை  6000 பனை விதைகளை  பூனாம்பாளையம், மண்ணச்சநல்லூர், சா.அய்யம்பாளையம் மற்றும் கொல்லபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகளின் கரைகளில், இந்து முன்னணி, சேவா பாரதி, VHP, ஊர் தலைவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள், சிறுமிகள் இவர்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக விதைத்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here