4 மாநிலங்களில் போதைப்பொருள் கடத்தல் – என்ஐஏ சோதனை 

0
147

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் சில ரௌடிகள் ஈடுபட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தில்லி யூனியன் பிரதேசத்திலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
பஞ்சாபைச் சோ்ந்த சில ரௌடிகள், பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள்களைக் கடத்தி அதை விற்பதன் மூலமாக வரும் தொகையைக் கொண்டு பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி அளித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here