அடுத்தாண்டு முதல் அக்னி வீரர்களாக பெண்கள்: விமானப்படை திட்டம்

0
367

சண்டிகர்:”விமானப்படையில், அக்னிவீரர்களாக பெண்களையும் அடுத்தாண்டு முதல் இணைத்து கொள்ள திட்டம் உள்ளது” என விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி கூறியுள்ளார்.

90வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சண்டிகரின் சுக்னா ஏரி அமைந்துள்ள பகுதியில் கொண்டாடப்பட்டது. விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்களின் அணிவகுப்பும், விமானப்படை விமானங்களின் சாகசமும் நடந்தது.

இந்த விழாவில் விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி  “நமது முன்னோர்களின் கடின உழைப்பு, விடா முயற்சி மற்றும் தொலைநோக்கு பார்வை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பெருமைமிக்க பாரம்பரியத்தை நாம் பெற்றுள்ளோம். இந்த வரலாற்று சிறப்பு மிக்க தினத்தில்நவீன ஆயுதங்களை கையாள புதிய படைப்பிரிவு உருவாக்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, புதிய அமைப்பு உருவாக்கப்படுவது இது முதல் முறையாகும். இதனால், 3 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்.

அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப்படையில் விமானப்படை வீரர்களை இணைத்து கொள்வது நம் அனைவருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், மிக முக்கியமாக இந்தியாவின் இளைஞர்களை திறனை பயன்படுத்துவதற்கும், அதை நாட்டிற்கு சேவையாக மாற்றுவதற்கும் ஒரு வாய்ப்பு.

விமானப்படையில் இணையும் அக்னிவீரர்கள், பணியை சிறப்பாக செய்யவும், சரியான திறன்களை பெறவும் உறுதி செய்ய பயிற்சி முறை மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் துவக்க கட்ட பயிற்சிக்காக 3 ஆயிரம் அக்னி வீரர்கள் இணைய உள்ளனர்.

இது வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும். அடுத்தாண்டு முதல் அக்னிவீரர்களாக பெண்களையும் இணைக்கும் திட்டம் உள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here