காவல் நிலையத்தை தாக்க அழைப்பு

0
144

கோழிக்கோடு, கேரளாவில் உள்ள கோழிக்கோடு காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்த அழைப்பு விடுத்த எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த நபரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது. இக்கட்சி தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பின் அரசியல் முகம் என்பது குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர், முகலியைச் சேர்ந்த ஷம்சுதீன் என தெரியவந்துள்ளது.இந்த நபர், வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த அழைப்பு விடுத்துள்ளார். அவர் மீது சோம்பலா பகுதி காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153,505(1)(b) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here