புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

0
164

ஃபெடரல் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினர்களில் இருந்து புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புது தில்லி [இந்தியா]: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அபுதாபியின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார், அதே நேரத்தில்இரு நாடுகளும் தொடர்ந்து வளரும் விரிவான மூலோபாய கூட்டாண்மை நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அபுதாபியின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு எனது வாழ்த்துகள். அவரது ஆற்றல்மிக்க மற்றும் தொலைநோக்கு தலைமையின் கீழ், எங்களது விரிவான மூலோபாய கூட்டாண்மை தொடர்ந்து ஆழமடையும் என்று நான் நம்புகிறேன்” என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஷேக் மொஹமட், ஜனவரி 2005 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப் படைகளின் துணைத் தளபதியாக பணியாற்றியுள்ளார். யுஏஇ ஆயுதப் படைகளை வியூகத் திட்டமிடல், பயிற்சி, நிறுவனக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியதற்காக அறியப்பட்டவர்.

                                                                                 தமிழில்: சகி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here