கிரையோஜெனிக் என்ஜின் சோதனை

0
108

திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பு பரிசோதனை பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் மகேந்திரகிரி ஆய்வு மையத்தில், சி.இ 20 இ 9 கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை 659 வினாடிகளுக்கு நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. வழக்கமான ராக்கெட் 22.2 டன் எடையை தாங்கிச் செல்லும். தற்போதைய பரிசோதனை வெற்றியடைந்ததன் மூலம் அதனால் கூடுதலாக 500 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. இந்த சோதனையை காணொலிக் காட்சி வாயிலாக பார்வையிட்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத், மகேந்திரகிரி ஆய்வு மைய விஞ்ஞானிகளை பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here