சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்னை யாரும் அவமதிக்கவில்லை. நான் நேராக சென்று அங்கு அமர்ந்தேன். ஒருவர் வந்து என்னிடம், ‘இதற்கு அப்பால் நிறைய இடம் உள்ளது. அங்கு சென்று உட்காருங்கள்’ என்றார். ‘இல்லை. நான் இறைவனை பார்க்க வந்துள்ளேன்; இங்கு தான் உட்காருவேன்’ என்று சொன்னதும், அவர் சென்று விட்டார்.
இறைவனை பார்க்கச் சென்றேன். யாரோ ஒருவர் வந்து சொன்னார். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மற்ற எல்லா தீட்சிதர்களும் என்னிடம் வந்து, இறைவனுக்கு அளித்த மாலை மற்றும் பிரசாதம் கொடுத்தனர்; வேறொன்றும் இல்லை.