மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உமேஷ் கோல்ஹே, ராஜஸ்தானின் உதய்பூரில் கன்னையா லால் ஆகியோர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக நாட்டில் பயங்கரவாத சூழலை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
இந்த இரண்டு கொலை சம்பவத்தால் உலக மக்களுக்கு, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் (பயன்கரவாதிகல் ) மீது வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது.
சம்பந்தபட்டவரின் சமூக வலைதள பதிவு அவர்களுக்கு பிடிக்காவிட்டால் உடனே கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவு செய்து அதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டால், அவர்களை பாதுகாக்க “விஸ்வ ஹிந்து பரிஷத்”தின் இளைஞர் படையான “பஜ்ரங்தள்” களமிறங்கும். அதற்கான உதவி எண்களை விரைவில் பஜ்ரங்தள் வெளியிடும்.
அச்சுறுத்தலை எதிர்கொள்வோர் அந்த எண்ணுக்கு அழைத்து புகார் செய்தால், இளைஞர் படையினர் உடனடியாக களமிறங்கி பாதுகாப்பு பணியை துவக்கி விடுவர்.