சென்னையில் ஜி 20 மாநாடு

0
218

கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி ஜி 20 அமைப்புக்கு பாரதம் தலைமையேற்றது. அதன்பின் பாரதத்தில் ஜி 20 தலைமைத்துவத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் 50க்கும் மேற்பட்ட பல்வேறு நகரங்களில் ஜி 20 மாநாட்டு கூட்டங்கள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனையொட்டி, ஜி 20 மாநாட்டு கூட்டங்கள் நடத்த ஆங்காங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில், சமீபத்தில் கூட, மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஜி 20 மாநாடு நடைபெற்றது. மகாராஷ்டிர மா நிலம் புனேவில் தற்போது ஜி 20 உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டம் நடைபெற்று வருகிற்து. அவ்வகையில், தற்போது ஜி 20 மாநாட்டின் கல்விக்குழு கூட்டம், சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here