மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை

0
105

கிரேட்டர் நொய்டாவில் கௌதம் புத்தர் பல்கலைக் கழகத்துடன் இணைந்து விஸ்வ சம்வாத கேந்திரம் ஏற்பாடு செய்திருந்த “மாற்றம் மற்றும் இடஒதுக்கீடு” என்ற இரண்டு நாள் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 5 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

மாநாட்டின் பொருள், ‘கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஹிந்து பட்டியல் சமூகத்திற்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற வேண்டுமா இல்லையா’ என்பது.

“மாற்றம் மற்றும் இடஒதுக்கீடு” என்ற இரண்டு நாள் மாநாட்டின் நிறைவு அமர்வின் போது பேசிய, நீதிபதி (ஓய்வு) சிவசங்கர், “மதமாற்றம் என்பது ஒரு நம்பிக்கையை முழுவதுமாக விட்டுவிட்டு மற்றொன்றை ஏற்றுக்கொள்வது. மேலும் நீங்கள் உங்கள் நம்பிக்கையை விட்டுவிட்டீர்கள் என்றால், இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளை ஏன் கோர வேண்டும்?” என்றார்.

தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் (டிஐசிசிஐ) தலைவர் பத்மஸ்ரீ மிலிந்த் காம்ப்ளே கூறுகையில், “குறைவான பிரதிநிதித்துவம் உள்ளவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவே இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பிற மதங்களுக்கு மாறியவர்கள் அதற்குத் தகுதியானவர்களின் பலனைப் பறிக்கின்றனர். இன்றும் அவர்கள் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை மதமாற்றம் செய்ய, இடஒதுக்கீடு என்ற பெயரில் சிலர் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கின்றனர். அவர்கள் சிறுபான்மையினர் ஆணையத்தில் தான் இடஒதுக்கீடு கோர வேண்டும். அதை எங்களிடமிருந்து பறிப்பதற்கு பதிலாக, அவர்கள் சிறுபான்மையினர் ஆணையத்தில் தான் இடஒதுக்கீடு கோர வேண்டும்.” என்றார்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் கூறுகையில், “மைம் பீம்’ முழக்கம் என்பது, பட்டியல் சமூகத்தினரை ஒழிக்கும் சதி. எஸ்.சிக்களின் நலனில் அக்கறை காட்டாமல், அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே அவர்களின் நோக்கம். அவர்கள் பட்டியல் சமூகத்தினர் பற்றி உண்மையாக அக்கறை கொண்டிருந்தால், அவர்கள் எஸ்.சிக்களுக்கு அவர்களின் (கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம்) நிறுவனங்களில் இடஒதுக்கீட்டின் பலனையும் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் உதவித்தொகையின் பலனையும் வழங்கியிருப்பார்கள். இந்த ஆண்டு சுவாமி தயானந்தரின் 200வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். தீண்டாமை அவேதா என்று சுவாமிஜி கூறியிருந்தார். அதாவது வேதங்களில் எங்கும் அது குறிப்பிடப்படவில்லை. இடஒதுக்கீடு பிரச்சனை சம்பந்தமாக எந்த முடிவையும் யாரும் இங்கு எடுக்கப்ப்போவதில்லை. ஆனால் முழு நாடும் இதைப் பற்றி சிந்திக்கும், அதனால்தான் இந்த மாநாட்டின் மூலம் இந்த தலைப்பை நாங்கள் விவாதிக்கிறோம். இது குறித்து நாடு தழுவிய விவாதம் இருக்க வேண்டும். இந்த இரண்டு நாள் விவாதத்தின் விரிவான முடிவுகளை வரும் காலங்களில் பார்ப்போம். கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூகவியலாளர்கள் இந்த பிரச்சினையை நாடு தழுவிய விவாதத்தின் மையத்திற்கு கொண்டு வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த கூட்டத் தொடருக்கு முன், தேசிய பட்டியல் சமூக ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்டர் பேசுகையில், “சுரண்டப்பட்ட சமுதாயத்தை முன்னோக்கி கொண்டு வரவே இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் உதவியுடன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் முன்வருகிறார்கள். அதற்காகவே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. பேராசை மற்றும் அழுத்தத்தால் மதம் மாறிய மக்களுக்கு இடஒதுக்கீடு பலன்கள் கிடைத்தால் அது தவறு” என்றார்.

பேராசிரியர் எஸ்.சி.சஞ்சீவ் ராயப்பா தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்த போது, “மதமாற்றம் செய்யப்பட்ட மக்கள் மிகவும் பாதுகாக்கப்பட்டுள்ளனர். நாங்கள் எஸ்.சி.க்கள் பாடப்படாத நாயகர்கள். மதம் மாறினால் இடஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்கும் என்றால் மதமாற்றங்கள் அதிகரிக்கும். எஸ்.சிக்கள் ஆவணங்களில் தங்கள் பெயரை மாற்றாமல் மறைத்து இட ஒதுக்கீடு பலன்களைப் பெறுகின்றனர். அவர்களின் உண்மையான கலாச்சாரத்தைப் பின்பற்றும் கிராமங்களில் உள்ள உள்ளூர் மக்களை மனமாற்றம் செய்து அழுத்தம் கொடுத்தால், அவர்கள் எங்கே போவார்கள்?” என கேள்வி எழுப்பினார்.

இந்த இரண்டு நாள் மாநாட்டில் ஏழு ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஏழு பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் பல்வேறு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், முப்பது முக்கிய பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், எட்டு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here