இந்திய விமானப் படையின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விமானப்படை தளபதி பாராட்டு

0
138

தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய இந்திய விமானப்படையின் விளையாட்டு வீரர்களுக்கானப் பாராட்டு நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள விமானப்படை தளத்தில் மார்ச் 15, 2023 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தேசிய, சர்வதேச அளவில் பதக்கங்களை வென்ற இந்திய விமானப்படையின் 3 அணிகளைச் சேர்ந்த 26 விளையாட்டு வீரர்கள் மற்றும் துணைப் பணியாளர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய விமானப்படை தளபதி, சாதனைப்படைத்த விளையாட்டு வீரர்களை பாராட்டுவதாக குறிப்பிட்டார். விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து, விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்கி இந்திய விமானப்படைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here