சத்ரபதி சிவாஜி முடிசூட்டு விழா

0
209

ஜூன் 1 மற்றும் 2ம் தேதிகளில் சத்ரபதி சிவாஜியின் 350வது முடிசூட்டு விழா கொண்டாட மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. மாநிலமெங்கும் மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி முடிசூடிய 350வது ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அம்மா நில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய அவர், “மாமன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 350வது முடிசூட்டு விழா வருகிற ஜூன் 1 மற்றும் 2ம் தேதிகளில் ராய்காட்டில் கொண்டாடப்படும். இந்த முடிசூட்டு விழா மாநிலத்திற்கு ஒரு உத்வேகமாக அமையும். சிவாஜி முடிசூட்டு விழாவை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிகளை இந்த ஆண்டு முழுவதும் மாநிலத்தில் அனைத்து பகுதிகளில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. நடத்தப்படும். மகாராஷ்டிர அரசு சார்பில் ஆக்ராவில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச மையம் ஒன்று அமைக்கப்படும்” என கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here