ரஜௌரியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை..!

0
150

ஜம்மு – காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.கண்டியின் கேசரி பகுதியில் 2 முதல் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர்.அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் வீரர் ஒருவர் காயமடைந்ததாகவும், வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 3 நாட்களில் ரஜௌரி பகுதியில் நிகழும் 3-வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here