மாமல்லபுரத்தில் ‘டபிள்யூ – 20’ மாநாடு

0
3369

மாமல்லபுரத்தில், ‘ஜி – 20’ நாடுகள் மாநாட்டின் பெண் பிரதிநிதிகள் பங்கேற்கும் ‘டபிள்யூ – 20’ மாநாடு, இன்றும், நாளையும் நடக்கிறது. நாளை மறுநாள், மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் சிற்பங்களை காண இருக்கின்றனர். தொடர்ந்து, ஜூன் 19, 20ம் தேதிகளில், ‘ஜி – 20’ நாடுகளின் மற்றொரு மாநாடும் நடக்கிறது. இன்றைய மாநாட்டில், அமைப்பின் பல நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். போலீசார், பாதுகாப்பு பிரிவினர் என, 300க்கும் மேற்பட்டோர், 21ம் தேதி வரை பாதுகாப்பிற்கு இருப்பர் என, போலீசார் தெரிவித்தனர். மாமல்லபுரம் பகுதியில் ‘டிரோன்’ பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவும் தயார் நிலையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here