காஷ்மீரில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை

0
107

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஜூமாகுண்ட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here