ஜம்மு – காஷ்மீரில் தேசிய கீதத்தை அவமதித்த 12 பேருக்கு ‘நோட்டீஸ்’

0
109

ஸ்ரீநகர்
ஜம்மு – காஷ்மீரில் தேச ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் ‘பெடல் பார் பீஸ்’ என்ற தலைப்பில் சைக்கிள் போட்டி கடந்த மாதம் 25ம் தேதி நடந்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் அன்றைய தினமே நடந்தது. நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. சிலர் அமர்ந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாநில அரசு நடத்திய விசாரணையில், 12 பேர் தேசிய கீதத்தை அவமதித்தது தெரிய வந்தது. அவர்கள் அனைவரின் மீதும், தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நிற்காததற்கு விளக்க கேட்டு, ஜம்மு – காஷ்மீர் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் மீது வழக்குப் பதிந்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here