இந்தியா உடனான உறவு எங்களுக்கு முக்கியம் – கனடா பாதுகாப்பு அமைச்சர்

0
232

ந்தியாவில் தடை செய்யப்பட்ட ‛காலிஸ்தான் டைகர் போர்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பழி சுமத்தினார். இதனால் இந்தியா – கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில்,இந்தியாவுடனான எங்கள் உறவு இப்போது ஒரு சவாலாக இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்தியா உடனான உறவு எங்களுக்கு முக்கியமானது. ஆனால் அதே நேரத்தில், சட்டத்தைப் பாதுகாத்து எங்கள் குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களிடம் இருக்கிறது. நாங்கள் ஒரு முழுமையான விசாரணையை நடத்தி உண்மையைப் பெறுவதற்கும் எங்களுக்குப் பொறுப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here