ஆசிய விளையாட்டு : கிரிக்கெட்டில் பதக்கத்தை உறுதி செய்த இந்திய

0
104

ஆசிய விளையாட்டில் ஆடவர் கிரிக்கெட் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேசத்ததை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. இதன்மூலம் தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை இந்திய அணி உறுதி செய்தது. சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விளையாட்டாக ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு நாளும் இந்தியா வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here