இந்தியாவில் இருந்து தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்ற கனடா

0
184

வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஜூனில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
இதற்கிடையே, இந்தியாவில் பணிபுரியும் கனடா துாதரக ஊழியர்களை, வரும் 10க்குள் திரும்பப் பெற வேண்டும் என, அந்நாட்டுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி, இந்தியாவில், 62 ஆக உள்ள கனடா துாதரக அதிகாரிகள் எண்ணிக்கையை, 41 ஆக குறைக்க உத்தரவிடப்பட்ட தாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் பணிபுரியும் கனடா துாதரக அதிகாரிகளை அந்நாட்டு அரசு திரும்ப பெற்றது. அவர்கள், மலேஷியா அல்லது சிங்கப்பூரில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி கனடா செய்தி நிறுவனம் ‛‛இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள தூதரக அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிங்கப்பூர் அல்லது மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்‛‛ என தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here