ஹோமி பாபா

0
87

ஹோமி ஜெகாங்கிர் பாபா அக்டோபர் 30, 1909 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அணு ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த இயற்பியலாளர். இந்திய அணுக்கருவியலின் தந்தை என்றும் அழைக்கப்பட்டார். 1933-ல் “காமா கதிர்களை உட்கிரகிப்பதில் எலெக்ட்ரான் பொழிவுகளின் பங்கு” பற்றி அவர் சமர்ப்பித்த அறிவியல் கட்டுரைக்கு ஐசக் நியூட்டன் படிப்புதவி கிடைத்தது. 1934-ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1937ஆம் ஆண்டு ஹோமி பாபாவும், ஹைட்லர் என்ற ஜெர்மன் இயற்பியலாளரும் இணைந்து செய்த அண்டக்கதிர்-பற்றிய ஆராய்ச்சி அவர்களுக்கு உலகப்புகழைத் தந்தது. ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்திற்கான ஆய்வுச்சான்றையும்,
மீசானின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் மூலம் காட்டினார். இந்த மீசான் ஆய்வுச்சான்று மிகவும் புகழ் வாய்ந்தது. இந்திய விஞ்ஞானத்திற்கு மிகப் பெரும் பங்களித்தவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here