ஹெலிகாப்டர் விபத்து 2-ம் ஆண்டு நினைவு தினம்

0
2688

நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு கடந்த, 2021ம் ஆண்டு , முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட, 14 பேர், இருந்து ஹெலிகாப்டரில் வந்த போது, காட்டேரி அருகே நஞ்சப்பா சத்திரத்தில் விபத்துக்குள்ளானது.
முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட, 14 பேரும் இறந்தனர். அவர்கள் இறந்த, 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நேற்று விபத்து நடந்த நஞ்சப்பா சத்திரம் கிராமத்தில், ராணுவ பயிற்சி கல்லுாரி சார்பில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
ராணுவ கல்லுாரி சார்பில் அமைக்கப்பட்ட புதிய நினைவு துாணில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. கிராமத்தில் வைக்கப்பட்ட முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட, 14 பேரின் படங்களுக்கு, ராணுவ பயிற்சி கல்லுாரி உதவி கமாண்டன்ட் ரியர் அட்மிரல் புருவிர்தாஸ், மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here