தேடப்பட்டு வந்த சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் : கார் வெடித்து பலி?

0
208

2008ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் மற்றும் 2019ம் ஆண்டு பிப்.,14ல் நடந்த புல்வாமா தாக்குதல் ஆகியவற்றில் மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார். இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், பாகிஸ்தானில் பதுங்கி இருந்தார். கடந்த மே 1ல் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. இந்நிலையில் தேடப்பட்டு வந்த மசூத் அசார், இன்று (ஜன.,1) காலையில் கார் வெடித்ததில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் மவுலானா மசூத் அசார் உள்ளிட்ட அனைவரும் உடல் சிதறி பலியானதாகவும், இதனையடுத்து அங்கு சென்ற பாகிஸ்தான் போலீசார், அப்பகுதியை சீல் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here