நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படத்திற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை

0
109

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் பிறந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி சுபாஷ் சந்திபோஸின் 127வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சம்விதன் சதானில் உள்ள நேதாஜி படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here